ஓட்டல் பில் கொடுக்காமல் எஸ்கேப் ஆன பூஜா காந்தி

தினமலர்  தினமலர்
ஓட்டல் பில் கொடுக்காமல் எஸ்கேப் ஆன பூஜா காந்தி

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் பூஜா காந்தி. இந்திப் படத்தில் அறிமுகமாகி, பெங்காலி படத்தில் நடித்து, தமிழில் கொக்கி படத்தில் அறிமுகமானவர் பூஜா காந்தி. அதன் பிறகு வைத்தீஸ்வரன் என்ற தமிழ் படத்தில் மட்டும் நடித்தார். ஆனால் கன்னடத்தில் முன்னணி நடிகை ஆனார். 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அதன்பிறகு அரசியலில் நுழைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார். அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார். அவரது லேட்டஸ்ட் சர்ச்சை இது.

பூஜா காந்தி பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சில நாட்கள் தங்கி உள்ளார். ஆனால் அவர் வாடகை, சாப்பாட்டு செலவு கொடுக்காமல் பாக்கி வைத்து ஓட்டலுக்கு டிமிக்கி கொடுத்து வந்துள்ளார். இதனால் ஓட்டல் நிர்வாகம் அவர் 4 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டல் பில் கொடுக்காமல் சென்று விட்டதாக சமீபத்தில் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த விஷயத்தில் பூஜா காந்தி போலீசுக்கும் டிமிக்கி கொடுத்து வந்தார். போலீசின் பிடி இறுகவே நேற்று போலீஸ் நிலையத்தில் ஆஜரான பூஜா காந்தி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, போலீஸ் நிலையத்தில் பணத்தை கட்டி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

மூலக்கதை