விபத்து குறித்து ராஷ்மி விளக்கம்

தினமலர்  தினமலர்
விபத்து குறித்து ராஷ்மி விளக்கம்

பிரபல தெலுங்கு நடிகையான ராஷ்மி கவுதம், தமிழில் கண்டேன், மாப்பிள்ளை விநாயகர் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று இரவு 11 மணியளவில் காரில் சென்ற இவர், சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது மோதினார். இதில் படுகாயமடைந்த அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தில் ராஷ்மி மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததாகவும், அவர் பயணித்த காரை பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ராஷ்மி கூறியிருப்பதாவது : தேசிய நெடுஞ்சாலையில் விளக்கு இல்லை. சையத் என்ற நபர், வேகமாக சாலையை கடக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக அவர் மீது கார் மோதிவிட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை நானும், டிரைவரும் மருத்துவமனையில் சேர்த்தோம். போலீஸ்க்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இது தான் அங்கு நடந்தது. கார் என்னுடையது அல்ல, நான் நடிக்கும் வெப்சீரிஸை தயாரிக்கும் தயாரிப்பாளர் உடையது.

விபத்து நடந்த இடத்தில் பலர் உதவிக்கு கூட வரவில்லை. போட்டோவும், வீடியோவும் எடுத்தனர். இது என்னை மிகவும் பாதித்தது. ஒரு சிலர் மட்டுமே உதவிக்கு வந்தனர் என்றார்.

மூலக்கதை