பரிஸ் - காவல்துறை அதிகாரி தற்கொலை!!
நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலை ஒட்டி, பரிசில் காவல்துறை அதிகாரி ஒருவர் சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகலுக்கு பின்னதாக, குறித்த காவல்துறை அதிகாரி தனது மகிழுந்துக்குள் இருந்து, சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதன் போது அவரது காதலி உடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது காதலியும் ஒரு காவல்துறை அதிகாரி என அறிய முடிகிறது.
12 ஆம் வட்டாரத்தின் quai de Bercy பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அப்பகுதி காவல்துறையினரே விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தற்கொலை செய்துகொண்ட அதிகாரி DOPC (direction de l'ordre public et de la circulation) பிரிவு அதிகாரியாக பணிபுரிபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.