Gennevilliers மேம்பாலத்தின் நான்கு சாலைகளும் இன்று திறப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
Gennevilliers மேம்பாலத்தின் நான்கு சாலைகளும் இன்று திறப்பு!!

ஆறு மாத கால திருத்தப்பணிகளின் பின்னர் Gennevilliers மேம்பாலம், இன்று புதன்கிழமை முதல் மீண்டும் சேவைக்கு வருகின்றது. 
 
A15 நெடுஞ்சாலை ஊடறுக்கு Gennevilliers மேம்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆறு மாதங்ககுக்கு முன்னர், இடிந்து நொருங்கியதில் நான்கு வழி சாலையின் ஒரு வழி மூடப்பட்டிருந்தது. பின்னர் தொடர்ச்சியாக திருத்தப்பணிகள் இடம்பெற்று, குறித்த திகதியில் நேற்று மார்ச் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று புதன்கிழமை காலை 5:00 மணியில் இருந்து நான்காவது வீதியும் திறக்கப்பட்டு முழுமையாக சேவைக்கு வரப்படுகின்றது. 
 
மேம்பாலத்தின் திருத்தப்பணிகளுக்காக ஆறு மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டிருந்தன. கடந்த வருட கோடை காலத்தில் இருந்து திருத்தப்பணிகள் இடம்பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை