Saint-Sulpice தீ! - விபத்து இல்லை என்கின்றார்கள் காவல்துறையினர்!
கடந்த ஞாயிற்றுக்கிழமை Saint-Sulpice தேவாலயத்தில் இடம்பெற்ற தீ சம்பவம் விபத்து இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் பரிஸ் ஆறாம் வட்டாரத்தில் உள்ள Saint-Sulpice தேவாலயத்தின் இரு பகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் துணிகளும், ஆடைகளும், சில ஆவணங்களும் எரிந்து சாம்பலாகின. தீ உடனடியாக அணைக்கப்பட்ட போதும் இந்த தீ பரவியதற்குரிய காரணங்களை உடனடியாக கண்டறியமுடியவில்லை. இந்நிலையில், இது ஒரு விபத்து இல்லை எனவும், விஅத்துக்குரிய எந்த முகாந்திரமும் அங்கு இருந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முதல் கட்டமாக, இது தனிநபர்களின் குற்றச்செயல் காரணமாக ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.