€70 பணத்துக்காக எண்பது வயது மூதாட்டிக்கு கத்திக்குத்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
€70 பணத்துக்காக எண்பது வயது மூதாட்டிக்கு கத்திக்குத்து!!

பா-து-கலேயில் எண்பது வயது மூதாட்டி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காவல்துறையினர் தாக்குதலாளியை கைது செய்துள்ளனர். 
 
கடந்த சனிக்கிழமை இரவு Bethune நகர் அருகே உள்ள Lillers  (Pas-de-Calais) எனும் சிறு கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த திருடன் ஒருவர் மூதாட்டியிடம் உள்ள பணத்தினை பறிப்பதற்காக கத்தியால் தாக்கியுள்ளான். பின்னர் அங்கிருந்த பணத்தினை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளான். 
 
காவல்துறையினர் பின்னர் அவனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்போது <<மூதாட்டியிடம் இருந்த €70 கள் பணத்தினை திருடுவதற்காகவே அவரை தாக்கினேன்>> என தெரிவித்திருந்தார். 
 
ஆனால் துரதிஷ்ட்டவசமாக, கத்திக்குத்துக்கு இலக்கான மூதாட்டி, உயிருக்கு போராடிய நிலையில் அவசர இலக்கத்துக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். SAMU மூதாட்டியிடம் வந்து சேர்வதற்கு முன்னர் அவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை