Draguignan - நான்கு மாடி கட்டிடத்தில் பாரிய தீ விபத்து!!
நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு var மாவட்டத்தின் Draguignan நகரில் உள்ள கட்டிடம் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.
நான்கு அடுக்குகள் கொண்ட இந்த கட்டிடத்தில், நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் திடீரென தீ பரவ தொடங்கியுள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 40 தீயணைப்பு படையினர் தீயினை அணைக்க போராடியுள்ளனர்.
தீயில் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. தீ பரவியதற்குரிய காரணங்களும் அறிய முடியவில்லை. முதல்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.