வேலியில் போன ஓணானை...
அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படுகிறது. அதுவும் தேர்தல் சமயத்தில், உஷாராகவே அவர்கள் இருக்க வேண்டும்.நீண்ட அரசியல் அனுபவம் உள்ள, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான, நிதிஷ் குமார் உஷாராக இருந்தும், ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.இங்குள்ள முசாபர்புரில், விடுதியில் இருந்த சிறுமியர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அந்த விடுதியை நடத்தி வந்தவருடன், மாநில பெண் அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவரும் குற்றங்களில் ஈடுபட்டதாகவும் புகார் வந்தது.அதையடுத்து, அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சிப் பதவியில் இருந்தும், மஞ்சு வர்மா நீக்கப்பட்டார்.