போராட்டங்களிற்குத் தடை - அரசாங்கத்தின் அதிரடி - காணொளி
கடந்த சனிக்கிழமை மஞ்சள்மேலாடைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பெரும் சேதங்களும், கடுமையான வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இது அரசாங்கத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தன. இந்த வன்முறைகளை உடனடியாகவே பிரதமர் கண்டித்திருந்தார்.
இன்று மிக அவசரமாக நடாத்தப்பட்ட அதிகாரமட்டச் சந்திப்பில் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், பிரதமர் எதுவார் பிலிப், உள்துறை அமைச்சர் கிறிஸ்தோப் காஸ்தனே ஆகியோர் ஆலோசனைகளை நடாத்தியிருந்தனர்.