வெளிநாடு ஒன்றில் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாபம்!
நியுசிலாந்தின் குயின்ஸ்டவுன் பகுதியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குயின்ஸ்டவுன் - கவ் லேன் (Cow Lane) பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் பணியாற்றிய குறித்த இலங்கையர் கடந்த வாரம் கடுமையாக தாக்கப்பட்டார்.
இதில் அவர் கோமா நிலையை அடைந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு பேரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி வழக்கு விசாரணை மீள இடம்பெறவுள்ளது.