மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் வன்முறை! - பிரதமரை சந்திக்கும் ஆன் இதால்கோ!!

PARIS TAMIL  PARIS TAMIL
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் வன்முறை!  பிரதமரை சந்திக்கும் ஆன் இதால்கோ!!

நாளை செவ்வாய்க்கிழமை பிரதமர் எத்துவா பிலிப்புக்கும் பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோவுக்கும் இடையே முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது. 
 
நேற்று முன்தினம் பரிசில் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் பலத்த வன்முறை ஏற்பட்டதோடு பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பெருமளவில் சேதமடைந்தனர். பரிஸ் நகரமே வன்முறையால் திளைத்திருந்தது. இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை பிரதமரை சந்தித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். பரிசில் கடந்த சனிக்கிழமை ஒரு நாளில் 140 கடைகள், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இதில் அதிகளவான கடைகள் சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிறுவனங்கள் ஆகும். 
 
வன்முறையில் இருந்து பரிசை பாதுகாப்பது குறித்த முக்கிய முடிவினை நாளை இருவரும் சந்தித்து எடுக்க உள்ளதாக அறிய முடிகிறது. கடந்த டிசம்பர் 3 ஆம் திகதியும் இதுபோன்றதொரு சந்திப்பு இருவருக்கும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை