கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண்கள் கைது!

PARIS TAMIL  PARIS TAMIL
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை பெண்கள் கைது!

வெளிநாடு செல்ல முயற்சித்த பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
வெளிநாட்டில் பணிக்கு செல்வதற்காக போலி தகவல் சமர்ப்பித்த 2 பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளை ஏமாற்ற முயற்சித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
குறித்த இருவரையும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் ஒரு பெண் கடந்த 13ஆம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் செல்வதாக தெரிவித்துள்ளார். எனினும் அவரது கடவுச்சீட்டை சோதனையிட்ட போது அதில் போலி இந்திய விசா ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 
அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் சோதனையிட்ட போது அவரிடம் இருந்து குவைத் விசா மற்றும் 3 விமான டிக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
 
அன்றைய தினமே போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த இன்னும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

மூலக்கதை