இந்தோனேஷியா மழைக்கு 50 பேர் பலி

தினமலர்  தினமலர்
இந்தோனேஷியா மழைக்கு 50 பேர் பலி

ஜெயபுரா: தென் கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் பப்புவா பகுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 50 பேர் பலியாகினர்.

தீவுநாடான இந்தோனேஷியாவில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. ஜனவரியில் இங்குள்ள சுலவேசி தீவில் பெய்த கனமழையால் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பப்புவா பகுதியில் உள்ள சென்தானியில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இவற்றில் 50 பேர் பலியானதாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. மழை குறைந்தாலும் சாலைகளில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என மீட்புப் படையினர் கூறினர்.

மூலக்கதை