யாழில் 17 வயதுடைய மாணவர்களின் மோசமான செயற்பாடு!
17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது,
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வைத்து மாணவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மூவரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்டை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருப்பவர்கள் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.