கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3-ந் தேதி பள்ளிகள் தொடங்கி அன்றே புத்தகங்கள் கிடைக்கும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3ந் தேதி பள்ளிகள் தொடங்கி அன்றே புத்தகங்கள் கிடைக்கும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 3- ந் தேதி பள்ளிகள் தொடங்கி, அன்றே மாணவர்களுக்குப் புத்தகங்கள் கிடைக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு ஏப்ரல் 12-ந் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு தேர்வுகள் முன்கூட்டியே முடிவதால் 50 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வருகிற ஜூன் 3-ந் தேதி, விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

பள்ளிகள் திறந்த அன்றே மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்க, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மூலக்கதை