ஸ்டெர்லைட் ஆலை புதிய சி.இ.ஓ., நியமனம்

தினமலர்  தினமலர்
ஸ்டெர்லைட் ஆலை புதிய சி.இ.ஓ., நியமனம்

சென்னை:ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, பங்கஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, பங்கஜ் குமார் நேற்று நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார்.‘டாடா ஸ்டீல், மிட்டல் ஸ்டீல், அதானி போர்ட்ஸ்’ ஆகியவற்றில், உயர் அதிகாரியாக, இவர் பணியாற்றி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில், தலைமை இயக்க அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.


தலைமை செயல் அதிகாரியாக இருந்த, ராம்நாத் பணி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியாக, பங்கஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். முதுநிலை ஆலோசகராக, ராம்நாத் தன் பணியை தொடர்வார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை