நியூசிலாந்தை அதிர வைத்த துப்பாக்கி சூடு! பெண்ணொருவர் உள்ளிட்ட 4 பேர் அதிரடியா கைது

PARIS TAMIL  PARIS TAMIL
நியூசிலாந்தை அதிர வைத்த துப்பாக்கி சூடு! பெண்ணொருவர் உள்ளிட்ட 4 பேர் அதிரடியா கைது

 

நியூசிலாந்தின் - கிரிஸ்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
 
மேலும் , 48 பேர் காயமடைந்துள்ள நிலையில் , அதில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.
 
இதில் , அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்நிலையில் , நியூசிலாந்து பாதுகாப்பு படையினரால் இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்படும் காணொளியொன்று வௌியாகியுள்ளது.
 
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது அருகில் மகிழூர்தியொன்றில் இருந்த நபரொருவர் அதனை பதிவு செய்து வௌியிட்டுள்ளார்.
 

 

மூலக்கதை