சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்

தினமலர்  தினமலர்
சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் கடைசிநாளில் அதிக ஏற்றத்துடன் வர்த்தமாகின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 240.83 புள்ளிகள் உயர்ந்து 37,995.72ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 74.90 புள்ளிகள் உயர்ந்து 11,418.15ஆகவும் வர்த்தகமாகின.

முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருப்பது, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு உயர்வு

வர்த்தக துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.69.14ஆக வர்த்தகமானது.

மூலக்கதை