மீண்டும் பாடலாசிரியராக பா.விஜய்

தினமலர்  தினமலர்
மீண்டும் பாடலாசிரியராக பா.விஜய்

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நிறைய படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டு முன்னணி பாடலாசிரியராக விளங்கினார் பா.விஜய். ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அரிதாரம் பூசிய பா.விஜய், பல படங்களில் நடித்தார்.

நடிகனாக வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறியதே தவிர அவர் நடித்த ஒரு படமும் ஓடவில்லை. இனியும் நடிப்பு மீது கவனம் செலுத்தினால் பொழப்பு கெட்டுவிடும் என்ற யதார்த்தத்தை உணர்ந்து மீண்டும் பாடல் எழுதுவதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் பா.விஜய்.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் அவரை சந்தித்து பா.விஜய் வாய்ப்பு கேட்டதால். இந்த படத்தில் அஜித் - வித்யாபாலன் நடிக்கும் காட்சிக்காக ஒரு பாடலை எழுதும் வாய்ப்பை பா.விஜய்க்கு கொடுத்துள்ளார் யுவன்.

6 ஆண்டுகளுக்கு முன் அஜித் நடிப்பில் வெளியான 'ஆரம்பம்' படத்திற்காக யுவன சங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களையும் பா.விஜய் எழுதியிருந்தார்.

'ஆரம்பம்' வெளியாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் மீண்டும் அஜித் படத்தில் இணைந்துள்ளார் பா.விஜய்.

மூலக்கதை