பிரியா வாரியரின் செயலால் கண் கலங்கிய இயக்குனர்

PARIS TAMIL  PARIS TAMIL
பிரியா வாரியரின் செயலால் கண் கலங்கிய இயக்குனர்

 கடந்த ஒரு வருடமாக சோஷியல் மீடியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் புருவ அழகி எனப்படும் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த புகழுக்கு காரணமான இவர் நடித்த ஒரு அடார் லவ் படம், கடந்த மாதம் வெளியானது. ஆனாலும் பிரியா வாரியருக்கு கிடைத்த புகழ், பப்ளிசிட்டி எதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு உதவவில்லை. இந்த படத்தில் இயக்குனர் ஓமர் லுலு கிளைமாக்சை மாற்றி மீண்டும் படமாக்கி திரையிட்ட கசப்பான அனுபவமும் நடந்தது.

 
இந்த நிலையில் ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பது போல நடிகை பிரியா வாரியர் தன்னை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் ஓமர் லுலுவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வதை (unfollow) நீக்கியுள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் இந்த தகவலை வெளிப்படுத்தினார்
 
அதுமட்டுமல்ல படம் வெளியாவதற்கு முன்பு இயக்குனருடன் சேர்ந்து பிரியா வாரியர் கூட்டாக அளித்த பேட்டியையும் அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள். அதில் தனக்கு ஒரே நேரத்தில் விஜய்சேதுபதி படம், சல்மான்கான் படம் ஆகிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் அந்த நேரத்தில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஓமர் லுலுவின் படத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று பிரியா வாரியர் கூறியிருந்தார்.
 
ஆனால் அந்த வீடியோவை பார்த்ததும் கண்கலங்க ஆரம்பித்தார் ஓமர் லுலு. தொகுப்பாளர் அதன் காரணம் கேட்டபோது இப்பொழுது பிரியா வாரியர் பாலிவுட் லெவலில் சல்மான்கான் படத்தில் நடிக்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் அதனால் என்னைப் போன்ற சிறிய இயக்குனர்கள் இனி அவருக்கு தேவைப்பட மாட்டார்கள் என்று நா தழுதழுக்க கூறி சில நொடிகள் தொடர்ந்து பேசமுடியாமல் கண் கலங்கினார்.
 

மூலக்கதை