திருமணத்திற்குப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி

தினமலர்  தினமலர்
திருமணத்திற்குப் பின்னும் நடிப்பேன்: அஞ்சலி

கற்றது தமிழ் படத்தின் மூலம், தமிழ் படங்களில் ரீ என்ட்ரி ஆனவர் அஞ்சலி. அந்த படத்தின் கேரக்டர் ஆனந்தியாகவே கொண்டாடப்பட்டவர். தொடர்ந்து, அங்காடி தெரு, தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். யதார்த்தமான கேரக்டர்களில் நடித்து, தனக்கென ஒரு முத்திரையை பதித்திருக்கும் நடிகை அஞ்சலி, தற்போது, ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகப் போவதாகவும், திருமணத்துக்குப் பின் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் செய்தி பரவி இருக்கிறது.

இது குறித்தெல்லாம், சமீபத்தில் நிருபர்கள் அவரிடமே கேட்டுள்ளனர். உடனே கோபப்பட்டு கொந்தளித்த அஞ்சலி, திருமணம் செய்து கொண்டு போய் ரிடையர் ஆன நடிகைகளெல்லாம் மீண்டும் நடிக்க வரும்போது, நான் ஏன் நடிக்காமல் வீட்டில் முடங்க வேண்டும். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை; அப்படியே, திருமணம் உடனடியாக நடந்தாலும், நான் தொடர்ந்து நடிப்பேன். ஒரு நாளும் எங்கும் நான் முடங்க மாட்டேன் என கூறியுள்ளார்.

மூலக்கதை