அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு

தினமலர்  தினமலர்
அதிதி மேனன் மீது வழக்கு தொடருவோம்: தமுக்கம் நண்பர் குழு அறிவிப்பு

வளர்ந்து வரும் நடிகையான அதிதி மேனன், உடன் நடித்த அபி சரவணன் என்ற நடிகரை காதலித்தாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. திருமணத்துக்கான ஆதாரங்களை அபி சரவணன் காட்டுகிறார். அது போலி என்று மறுக்கிறார் அதிதி மேனன். அவர் அபி சரவணன் பற்றி குறிப்பிடும்போது, ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் போராட்டம் என்று கூறி மக்களிடம் பணம் வசூலித்து வீடு ,கார் வாங்கியதாக குற்றம் சாட்டினார். இதற்கு மதுரை தமுக்கம் நண்பர்கள் குழு என்ற அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து அதன் நிறுவனர் வழக்கறிஞர் ஷோபனா ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

திரைப்பட நடிகர் அபிசரவணன் மற்றும் நடிகை அதிதிமேனன் தொடர்பான பிரச்சனையில் நடிகை அதிதிமேனன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஜல்லிகட்டுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணம் பெற்றதாகவும், அந்த பணத்தில்தான் நடிகர் அபி சரவணன் வீடு வாங்கியதாகவும் கூறியுள்ளார். அவரின் இந்த குற்றச்சாட்டு ஜல்லிகட்டு பிரச்சனைக்காக சுதந்திர போராட்டத்திற்கு இணையாக தன்னெழுச்சியோடு போராடியவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.

போராட்டத்தில் பணம் பெற்றதாக வசூல் செய்ததாக அதிதிமேனன் கூறியது தவறானது கண்டிக்கதக்கது. அவரது பேச்சிற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் நடிகை அதிதிமேனன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளோம். என்றார்.

மூலக்கதை