தமிழகத்தில் தளவாட உற்பத்தி மையம் அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
பெங்களூரு: பெங்களூரு எலகங்காவில் நடந்து வரும் விமான கண்காட்சியில் தமிழக அரசின் ஒருங்கிணைப்புடன் விமான தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு சார்பில் ஒரு ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், இதை நேற்று பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த இந்தோ-பிரான்ஸ் கருத்தரங்கு நடந்தது. இதில் அமைச்சர் சம்பத் பேசுகையில், “மத்திய அரசு தமிழ்நாடு, குஜராத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. சென்னை, ஓசூரு, சேலம் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் இதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது’’ என்றார்.