பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம் : ரூபாயின் மதிப்பு உயர்வு

தினமலர்  தினமலர்
பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம் : ரூபாயின் மதிப்பு உயர்வு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(பிப்., 22) சரிவுடன் துவங்கின. ஆனால் சற்றுநேரத்தில் சரிவு மீண்டன. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 75.24 புள்ளிகள் சரிந்து 35,823.11-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 25.95 புள்ளிகள் சரிந்து 10,763.90-ஆகவும் வர்த்தகமாகின.

காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 10 புள்ளிகளும், நிப்டி 4 புள்ளிகளும் ஏற்றம் கண்ட நிலையில், 10.50 மணியளவில் மீண்டும் பங்குச்சந்தைகள் சரிந்தன. இதனால் இன்றைய வர்த்தகம் தள்ளாட்ட நிலையிலேயே வர்த்தகமாகின்றன.

ரூபாயின் மதிப்பு உயர்வு


இன்றைய அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.71.22ஆக வர்த்தகமானது.

மூலக்கதை