மகள்கள் மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு காதலனை பார்க்க சென்ற கொடூர தாய்!

PARIS TAMIL  PARIS TAMIL
மகள்கள் மூவரை சுட்டுக்கொன்றுவிட்டு காதலனை பார்க்க சென்ற கொடூர தாய்!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இளம் தாயார் ஒருவர் தமது மகள்கள் மூவரை சுட்டுக்கொன்று தாமும் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த வாரம் மிச்சிகன் மாகாணத்தின் கிராமப்புற பகுதி ஒன்றில் 28 வயதான தாயார் ஒருவர் தமது மகள்கள் மூவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
 
Cedar Springs பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் கடந்த திங்களன்று நடந்துள்ளது.
 
தொடர்ந்து அவர் தமது மகள்களின் சடலங்களை தனது காரில் எடுத்துக் கொண்டு தனது காதலரின் குடியிருப்புக்கு விரைந்துள்ளார்.
 
அங்கே அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
 
இச்சம்பவம் நடந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கடந்தே தற்கொலை செய்துகொண்ட இளம்தாயாரின் காதலரும் அவரது தந்தையும் இக்கொடூர சம்பவத்தை கண்டறிகின்றனர்.
 
அதிர்ச்சியடைந்த இருவரும் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் நால்வரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
முதற்கட்ட விசாரணையில் தற்கொலை செய்துகொண்ட 28 வயதான ஆப்ரியான் மூர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அவருக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது எனவும்,
 
 
இதனால் சுமார் 10 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மட்டுமின்றி வேட்டைக்கான துப்பாக்கியை பயன்படுத்தி தமது மகள்கள் மூவரை கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
 
 

மூலக்கதை