இலங்கையில் மரண தண்டனை உறுதியானது? இறுதி தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி மைத்திரி

PARIS TAMIL  PARIS TAMIL
இலங்கையில் மரண தண்டனை உறுதியானது? இறுதி தீர்மானத்தை எடுத்த ஜனாதிபதி மைத்திரி

இலங்கையில் முதலில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி தீர்மானத்திற்கு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 
அத்துடன் குற்றவாளி சம்பந்தமாக ஜனாதிபதி இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மிக விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் தினம் அறிவிக்கப்படும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
 
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.
 
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர் பட்டியலையும் ஜனாதிபதி பெற்றுக் கொண்டார்.
 

மூலக்கதை