உணவகத்தில் உணவு உற்கொண்ட பெண் உயிரிழப்பு! 28 பேர் ஆபத்தில்

PARIS TAMIL  PARIS TAMIL
உணவகத்தில் உணவு உற்கொண்ட பெண் உயிரிழப்பு! 28 பேர் ஆபத்தில்

 

ஸ்பெயினில் வேலன்சியாவில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு உண்ட ஒரு பெண் இருந்துள்ளார். மேலும் இங்கு உணவு உண்ட 28 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
 
மிச்சலைன் கைட் என்ற உணவகங்களின் தர வரையறை செய்யும் குழுமம் இந்த உணவகத்துக்கு சிறந்த உணவகம் என்ற தர சான்றிதழை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் 12 வயது மகனுடன் இந்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு சென்றனர். இரவு உணவு உண்ட பின்னர் இவர்கள் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி தொந்தரவுகள் இருந்தன.
 
தற்போது இந்த சமபவத்தால் இந்த உணவகம் மூடப்பட்டுள்ளது. உணவகத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
பிப்ரவரியில் இந்த உணவகத்தில் உணவு உண்ட 75 பேரிடம் விசாரணை செய்த அதிகாரிகள் அவர்களில் பலருக்கு உணவு கெட்டு போவதால் உண்டாகும் பாதிப்பு ஏற்பட்டதாக கண்டறிந்துள்ளனர்.

 

மூலக்கதை