இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முதுகுவலி காரணமாக ஹர்திக் விலகல்

தினகரன்  தினகரன்
இந்தியா  ஆஸ்திரேலியா தொடர் முதுகுவலி காரணமாக ஹர்திக் விலகல்

புதுடெல்லி: முதுகுவலி காரணமாக  இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அதற்கு பதிலாக ரவீந்திர ஜடஜா ஆடும் அணியில் இடம் பெறுகிறார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரோலியா அணி 2 டி20, 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி நாளை மறுதினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவின் ஆடும் அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருந்தார். அவர் கடந்த சில நாட்களாக முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் இருந்து விலகியுள்ளார். நல்ல ஆடும் நிலையில் இருந்தும் அவர் ேபாட்டிகளில் இருந்து வெளியேறுவது தொடர்கதையாகி உள்ளது.காயம் காரணமாக  ஹர்திக் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடும் வாய்ப்பை இழந்தார். அதேபோல் மேற்கு இந்திய அணியுடனான தொடரிலும் விளயைாடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தனியர் தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துகளை ஹர்திக் தெரிவித்தார். அதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. உலக கோப்பை போட்டி நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் காயம் காரணமாக ஹர்திக் மீண்டும் அணியில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே ஹர்திக் விலகியதால் வாய்ப்பு கிடைத்த தமிழக வீரர் விஜய்சங்கர் தனது திறனை நிரூபித்து நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகியதால் அவருக்கு பதில் ஆடும் அணியில் ரவீந்திர ஜடஜா இடம் பெறுகிறார்.

மூலக்கதை