மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு போக்சோவில் சிறை

தமிழ் முரசு  தமிழ் முரசு
மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு போக்சோவில் சிறை

அறந்தாங்கி: பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி களப்பக்காடு என். ஜி. ஜி. ஓ காலனியை சேர்ந்த தம்பதி சேகர். முத்துலட்சுமி.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறந்து 4 மாதங்கள் ஆனபோது சேகர் இறந்து விட்டார்.

இதையடுத்து, பெண் குழந்தையை அவரது தாத்தா திருநெல்வேலிக்கு அழைத்து சென்று வளர்த்து வந்தார். இதன் பின்னர் முத்துலட்சுமி, மினிலாரி டிரைவர் ரவிச்சந்திரன் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 1 ஆண் குழந்தை மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஆண்டு திருநெல்வேலியில் தாத்தா வீட்டில் வளர்ந்து வந்த தனது பெண் குழந்தையை முத்துலட்சுமி அறந்தாங்கி அழைத்து சென்று அங்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.

முத்துலட்சுமியும், அவரது 3 குழந்தைகளும் வீட்டில் இல்லாத நேரங்களில் ரவிச்சந்திரன், அந்த பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்துலெட்சுமி, இதுபற்றி  அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து ரவிச்சந்திரனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை கைது செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


.

மூலக்கதை