ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆயுதப்படை காவலர் பரிதாப சாவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆயுதப்படை காவலர் பரிதாப சாவு

சென்னை: விழுப்புரம், வைலாமூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (28). இவர், சென்னை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றினார்.

இந்நிலையில் சுபாஷ், சொந்த ஊருக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 2. 30 மணியளவில் பரனூர் சிங்கபெருமாள் கோவில் அருகே வந்தபோது திடீரென ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள், சுபாஷை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை ஒரு மணியளவில் சுபாஷ், பரிதாபமாக இறந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை