சயன், மனோஜை கைது செய்யும் நடவடிக்கை கூடாது: சென்னை ஐகோர்ட்

தினகரன்  தினகரன்
சயன், மனோஜை கைது செய்யும் நடவடிக்கை கூடாது: சென்னை ஐகோர்ட்

சென்னை: சயன், மனோஜை கைது செய்யும் நடவடிக்கை கூடாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் ஜாமின் ரத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மேலும் உதகை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சயன், மனோஜ் மனுதாக்கல் செய்திருந்தனர். 2 பேரின் மனுவுக்கு காவல்துறை திங்கட்கிழமைக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திங்கட்கிழமை வரை கைது நடவடிக்கையில் போலீஸ் ஈடுபடக்கூடாது எனவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை