பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து! ஒருவர் பலி, 11 பேர் கைது

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து! ஒருவர் பலி, 11 பேர் கைது

லண்டன் யூஸ்டன் ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
 
நேற்று இரவு 10.44 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் 11 கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
கத்திக்குத்துக்கு உள்ளன நபர் யூஸ்டன் ரயில் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் தள்ளாடியபடியே நுழைந்து கீழே விழுந்ததை தொடர்ந்து விடுதி நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அவசர சிகிச்சை பிரிவினரின் கடும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் குறித்தநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் 11 பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மூலக்கதை