சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை மரபுகளை மீறி வரவேற்ற பிரதமர் மோடி!!

தினகரன்  தினகரன்
சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை மரபுகளை மீறி வரவேற்ற பிரதமர் மோடி!!

டெல்லி : அரசு முறை பயணமாக இந்தியா வந்த சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை மரபுகளை உடைத்து விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்றார்.  இளவரசர் பாகிஸ்தானில் இருந்து நேரடியாக இந்தியா வர அனுமதி மறுப்பு தெற்கு ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வர இருந்தார். ஆனால் புல்வாமா தாக்குதலை தொடர்நது இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால்  பாகிஸ்தான் பயணத்தை முடித்து விட்டு நேரடியாக இந்தியா வர சவுதி இளவரசருக்கு இந்திய அரசு அனுமதி மறுத்தது. இதனால் இஸ்லாமாபாத்தில் இருந்து மீண்டும் ரியாத் சென்ற இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வருகை தந்தார். மரபுகளை மீறி பிரதமர் மோடி வரவேற்பு ஒரு நாள் பயணமாக டெல்லி வந்த அவரை,  மரபுகளை உடைத்து விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி இளவரசரை கட்டி அனைத்து வரவேற்றார். பொதுவாக இந்தியா வரும் வெளிநாட்டு பிரதிநிதியை வரவேற்க பிரதமர் நேரடியாக விமான நிலையம் செல்ல மாட்டாது. அதற்கு பதிலாக அமைச்சர்கள் விமான நிலையம் சென்று வெளிநாட்டு பிரதிநிதியை வரவேற்பர். ராணுவத் துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இளவரசரின் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியான இந்த இந்திய பயணத்தில் ராணுவத் துறையில் முக்கியமான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் பிரதமர் மோடியை சந்தித்து பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இளவரசர் முகமது பின் சல்மான் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். அப்போது முதலீடு, சுற்றுலா உள்ளிட்டவை தொடர்பான 5 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்தியா - சவுதி அரேபியா கடற்படை இணைந்து பயிற்சி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இளவரசரிடம் கோரிக்கை இதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு , பிரதமர் மோடி ஆகியோரை சவுதி இளவரசர் இன்று சந்தித்து பேசுகிறார். அப்பொழுது புல்வாமா தாக்குதல் தொடர்பாக எடுத்துரைக்கும் பிரதமர், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வலியுறுத்த வேண்டும் என்று இளவரசரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மூலக்கதை