இம்ரான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில்

தினமலர்  தினமலர்
இம்ரான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில்

புதுடில்லி: பாக்.,பிரதமர் இம்ரான்கானின் குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

பாக்.,பிரதமர் பதில்



இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியதாவது: எந்த ஆதாரமும் இல்லாமல், பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சுமத்தி வருகிறது. வன்முறைக்காக எங்கள் மண்ணை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பது எங்களது கொள்கை. புல்வாமா தாக்குதலில், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருப்பது குறித்து ஆதாரம் வழங்கினால், நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.

வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி


பாக். பிரதமரின் பேச்சுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூ த் பாகிஸ்தானில் இருப்பது அனைவரும் அறிந்ததே.புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலை பாக்., பிரதமர் கண்டிக்கவில்லை. தாக்குதல் தொடர்பான தகவல்களை இந்தியா தந்தால் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் .இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை