மீண்டும் பந்துவீசலாம் தனஞ்ஜெயாவுக்கு ஐசிசி அனுமதி

தினகரன்  தினகரன்
மீண்டும் பந்துவீசலாம் தனஞ்ஜெயாவுக்கு ஐசிசி அனுமதி

துபாய்: இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா சர்வதேச போட்டிகளில் மீண்டும் பந்துவீச ஐசிசி அனுமது அளித்துள்ளது.கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த தொடரில், அகிலா தனஞ்ஜெயாவின் (25 வயது) பந்துவீச்சு விதிமுறைகளுக்குப் புறம்பாக எறிவது போல உள்ளதாக புகார் எழுந்தது. அனுமதிக்கப்பட்ட 15 டிகிரி கோணத்தை  விடவும் அதிகமாக அவரது முழங்கை வளைவதாக ஆய்வில் தெரியவந்ததை அடுத்து, சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. தனது பந்துவீச்சு பாணியில் மாற்றங்களை மேற்கொண்ட தனஞ்ஜெயாவுக்கு சென்னையில் மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவரது பந்துவீச்சு முறையாக உள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து,  தனஞ்ஜெயா சர்வதேச போட்டிகளில் மீண்டும் பந்துவீச ஐசிசி நேற்று அனுமதி அளித்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் அவர் களமிறங்க உள்ளார்.

மூலக்கதை