ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஓ.பி.எஸ் நாளை ஆஜராகவில்லை என தகவல்

தினகரன்  தினகரன்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஓ.பி.எஸ் நாளை ஆஜராகவில்லை என தகவல்

சென்னை: அலுவல் காரணமாக ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஓ.பி.எஸ் நாளை ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 5 முறை சம்மன் அளிக்கப்பட்டும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஓ.பி.எஸ் ஆஜராகவில்லை. டிசம்பர் 20, ஜனவரி 8, 23 மற்றும் பிப்ரவரி 5ல் ஏற்கனவே ஆஜராக ஓ.பி.எஸ்-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இறுதியாக நாளை ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பி.எஸ்.க்கு சம்மன் அனுப்பி இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகள் இருப்பதாக கூறி நாளை ஆஜராக இயலாது என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை