கூடுவாஞ்சேரி அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
கூடுவாஞ்சேரி அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆதனுர் ஏரியில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் போது இந்த விபரீதம் நேர்ந்தது. மார்பில் கிரிக்கெட் பந்து பட்டத்தில் ராமசந்திரன் என்ற இளைஞர் உயிரிழந்தார். மைதானத்திலேயே உயிரிழந்த ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை