நாடு முழுவதும் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தக்கோரும் வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்
மதுரை : நாடு முழுவதும் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தக்கோரும் வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஜான்சிராணி என்பவர் தொடுத்த வழக்கை பிப்ரவரி 25ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.