நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா மனு

தினமலர்  தினமலர்
நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா மனு


லண்டன்,வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, பிரிட்டனுக்கு தப்பியோடிய தொழில்அதிபர் விஜய் மல்லையா, தன்னை நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளான்.இந்தியாவில், கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் மல்லையா, 63, விமான சேவை நிறுவனம் நடத்த, 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி திருப்பித் தராமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு தப்பிஓடினான். அவனை இந்தியா வுக்கு நாடு கடத்த, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்நிலையில், மல்லையாவை நாடு கடத்துவதற்கு, பிரிட்டன் நீதிமன்றம் முடிவு செய்து, அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அதற்கான உத்தரவில், பிரிட்டன் உள்துறை அமைச்சக செயலர் கையெழுத்திட்டார். இந்நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து, மல்லையா மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை