வீரர்கள் இறந்து நாடே சோகத்தில் இருக்கும்போது மனைவியின் டாப்லெஸ் படம் வெளியிட்ட நடிகருக்கு கண்டனம்

தினகரன்  தினகரன்
வீரர்கள் இறந்து நாடே சோகத்தில் இருக்கும்போது மனைவியின் டாப்லெஸ் படம் வெளியிட்ட நடிகருக்கு கண்டனம்

மும்பை: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் இறந்த நிலையில், தனது மனைவியின் டாப்லெஸ் படத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகருக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகர் பிரதிக் பாப்பர். இவர், நடிகை எமி ஜாக்சனின் முன்னாள் காதலன். தமிழில் இருந்து இந்தியில் ரீமேக்கான ‘’விண்ணைத்தாண்டி வருவாயா’’ படத்தில் பிரதிக் பாப்பர், எமி ஜாக்சன் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவரும் காதலித்தனர். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக தங்கள் காதலை முறித்துக்கொண்டனர். இந்நிலையில், வெளிநாட்டு நண்பருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக எமி ஜாக்சன் அறிவித்தார். இதை தொடர்ந்து சில நாட்களில் பிரதிக் பாப்பர் தனது திருமணத்தை அறிவித்ததுடன், சான்யா சாகர் என்பவரை மணந்தார். காதலர் தினத்தையொட்டி தனது மனைவி சான்யா சாகர் டாப்ெலஸ் ஆக போஸ் கொடுத்த போட்டோவை இணையதளத்தில் வெளியிட்ட பிரதிக் பாப்பரின் இந்த செயல், தற்போது அவரை பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்த நிலையில் நாடே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற ஒரு ஆபாச படத்தை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று, பிரதிக் பாப்பரை சரமாரியாக தாக்கி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை