காவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு

தினகரன்  தினகரன்
காவல்துறையில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு

சென்னை: காவல்துறைக்கு டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம் டெண்டரில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். டிஜிபி ராஜேந்திரனும், முதல்வர் எடப்பாடியும் ரூ.88 கோடி ஊழல் செய்துள்ளனர் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ரூ.38 கோடியில் செயல்படுத்த வேண்டிய திட்டத்துக்கு ரூ.88 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல் செய்யும் நோக்கத்தில் ஒருவரிடம் டிஜிட்டல் ரேடியோ ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மூலக்கதை