ரூ.20 லட்சம் காசோலை, அரசு பணி நியமன ஆணை: CRPF வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் வழங்கினார் ஓபிஎஸ்
தூத்துக்குடி: தமிழக அரசு அறிவித்த ரூ.20 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடி சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் துணை முதல்வர் ஓபிஎஸ் வழங்கினார். இதேபோல் சுப்பிரமணியன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி நியமன ஆணையை துணை முதல்வர் வழங்கினார்.