சிம்பு - த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்?

தினமலர்  தினமலர்
சிம்பு  த்ரிஷா மீண்டும் இணைகிறார்கள்?

அலை படத்தில் முதன்முறையாக சிம்புவும், த்ரிஷாவும் இணைந்து நடித்தனர். அதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைந்து நடித்தனர். அந்த படம் சூப்பர் ஹிட்டானது. அதன்பிறகு அவர்கள் ஜோடி சேரவில்லை.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை அடுத்து வெங்கட்பிரபு இயக்கும், மாநாடு படத்தில் நடிக்கிறார் சிம்பு. ராஷிக கண்ணா கதாநாயகியாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில், நடிகை த்ரிஷாவும் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப்படத்தில் த்ரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிம்பு சொன்னதாகவும், அதையடுத்து த்ரிஷாவிடம், வெங்கட்பிரபு பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.

மூலக்கதை