அப்பா பொறுமையாக இருந்திருக்கலாம் : கார்த்தி

தினமலர்  தினமலர்
அப்பா பொறுமையாக இருந்திருக்கலாம் : கார்த்தி

நடிகர் சிவகுமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னை செல்பி எடுத்த ஒரு இளைஞரின் மொபைல் போனை தட்டி விட்டார். அந்த சம்பவம் இணைய தளங்களில் விமர்சனமானதை அடுத்து மன்னிப்புக்கேட்டுக்கொண்ட சிவகுமார், அவருக்கு புதிய மொபைல் வாங்கிக்கொடுத்தார்.

அதையடுத்து சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது, தன்னை ஒருவர் செல்பி எடுத்தபோதும், அதை தட்டி விட்டார் சிவகுமார். இந்த விசயத்தையும் இணையதளங்களில் சர்ச்சையாக்கி வருகின்றனர்.

இதுப்பற்றி சிவகுமாரின் மகனான நடிகர் கார்த்தி ஒரு பேட்டியில் கூறும்போது, ஒருவரது அனுமதி இல்லாமல் அவரை செல்பி எடுப்பதே அநாகரீகமானது. செல்பியோ, போட்டோவோ எதுவாக இருந்தாலும் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் எடுக்க வேண்டும் என்ற நாகரீகத்தை இங்கே யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது ஒரு சோகமான விசயம்.

ஆனால் இந்த சிறிய விசயத்தை மீடூ விவகாரம் போன்று சர்ச்சையாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், இந்த விசயத்தில் அப்பா அவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாம் என்று தனது கருத்தினை கூறியிருக்கிறார் கார்த்தி.

மூலக்கதை