தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் : அம்சவர்தன்

தினமலர்  தினமலர்
தமிழக வீரர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் : அம்சவர்தன்

காஷ்மீரில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை கொடூர தாக்குதலுக்கு, 44 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளார்கள். இந்த படுபாதக செயல், நாடு முழுவதும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன. பலியான வீரர்களில் தமிழகத்தின், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியமும், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பழூர் கார்குடியை சேர்ந்த சிவசந்திரனும் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளது. அதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்க இருப்பதாக நடிகர் அம்சவர்தன் கூறியுள்ளார். இதற்காக அந்த குடும்பத்தினரை சந்திக்க இருக்க இருக்கிறார். இவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஆவார்.

வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு, நடிகர்கள் சார்பில் முதன் முதலில் நிதி உதவி அளித்து, துவங்கி இருக்கிறார் அம்சவர்தன். இவரைப்போன்று மற்ற திரைநட்சத்திரங்கள் உதவுவார்களா.?

மூலக்கதை