புல்வாமா தாக்குதல் : புடின் கண்டனம்

தினமலர்  தினமலர்
புல்வாமா தாக்குதல் : புடின் கண்டனம்

மாஸ்கோ : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி உள்ள செய்தியில், எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூர செயலை கடுமையாக கண்டிக்கிறோம். இதற்கு காரணமானவர்கள் மற்றும் உதவியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை