ஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு
கன்னியாகுமரி: ஜியோ நிறுவனத்திற்கு மத்திய அரசு அளித்து வரும் ஆதரவை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய அரசு ரிலையன்ஸ், ஜியோ நிறுவனங்களுக்கு அளித்து வரும் ஆதரவை பி.எஸ்.என்.எல். அரசு நிறுவனத்திற்கு வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.