ரூ.100 கோடிக்கு மேல் சொத்து 61 பேரிடம் தான் இருக்கிறதாம்!

தினமலர்  தினமலர்
ரூ.100 கோடிக்கு மேல் சொத்து 61 பேரிடம் தான் இருக்கிறதாம்!

புதுடில்லி:நாட்டில் உள்ள, 130 கோடி பேரில், 61 பேர் தான், தங்களிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக, வருமான வரி துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.


பினாமி


இது குறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர், பொ.ன் ராதாகிருஷ்ணன், லோக்சபாவில் கூறியதாவது:கடந்த, 2014 -– 15 வரி மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரில், 24 பேர் தான், தங்களிடம், 100 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்.இது, 2015 -– 16ல், 38 ஆகவும், 2017 – -18ல், 61 ஆகவும் அதிகரித்து உள்ளது. ஒருவர், கோடீஸ்வரர் என்பதற்கான ஒரே சீரான அளவுகோல் எதுவும், அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


மத்திய அரசு, பினாமி சொத்து பரிவர்த்தனை சட்டத்தின் கீழ், 6,900 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களை முடக்கியுள்ளது.கடந்த, 2018, டிசம்பர் நிலவரப்படி, வருமான வரி அதிகாரிகள், 2,000 பினாமி பரிவர்த்தனைகளை கண்டுபிடித்து உள்ளனர்.முடக்கம்பினாமிகள் பெயரில் வங்கி டெபாசிட், ரியல் எஸ்டேட், நிலம் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.மேலும், 1,800க்கும் அதிகமான வழக்குகளில், பினாமி சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன என, நிதித் துறை இணையமைச்சர், ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்து உள்ளார்.

மூலக்கதை