தகவல் தொடர்பு சேவைகளுக்கான ஜிசாட்-31 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்டது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

தகவல் தொடர்பு சேவைகளுக்கான, ஜிசாட்-31 செயற்கைக் கோள், பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள, பிரெஞ்ச் கயானாவில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜிசாட் - 31 என்ற 40 வது செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டமிட்டது. இதன்படி பிரான்ஸ் நாட்டின், பிரெஞ்ச் கயானாவில் இருந்து, ஏரியான் - 5 ராக்கெட் மூலம், விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளை பெற, இந்த செயற்கைக்கோள் உதவும். மொத்தம், 2,535 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், உள்நாட்டில் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டும் அல்லாது நாட்டைச்  சுற்றியுள்ள பெருங்கடல்கள் குறித்த தகவல்களையும் அளிக்கும். இதன் ஆயுட்காலம், 15 ஆண்டுகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை