‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’ - வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இராய் கூப்பர் அறிவிப்பு
வடகரோலினா மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இராய் கூப்பர் (ஆளுநர் மக்களால் நேரடியாகத்தேர்ந்தெடுக்கப்படுபவராவார்) அவர்கள் தமிழின் தொன்மையையும், பண்பாட்டு வளத்தையும் பாராட்டித்தைத்திங்களை வடகரோலினாவின் ‘தமிழ் மொழி, பண்பாட்டுத் திங்கள்’ என்று அரசுப் பொதுஅறிவிப்பு விடுத்துள்ளார். அதற்கான ஆவணப் பட்டயத்தையும், அதனை அவர் அறிவித்து வெளியிடும் நிகழ்படத்தையும் தமிழர்களிடம் வழங்கியுள்ளார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக வடகரோலினா மாநிலத்தில் வாழ்ந்து வரும் தமிழர்கள், கரோலினாதமிழ்ச்சங்கத்தை நிறுவி அதன் மூலம் தமிழரின் மொழியையும், பண்பாட்டையும் பேணிப் பாதுகாத்துவருகின்றார்கள். தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் மூலம் தம் எதிர்காலத் தலைமுறையினர்க்கும், தமிழ் மொழி கற்கும்ஆர்வமுடைய அயல் இனத்தவர்களுக்கும் தமிழ் மொழி கற்பிப்பதைப் பெரும் தொண்டாகச் செய்துவருகின்றார்கள். தமிழ்ப்பள்ளியில் இப்பொழுது ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணாக்கர் தமிழை ஆர்வமுடன் கற்றுவருகின்றார்கள்.
அத்துடன் தமிழர்கள் வடகரோலினா மாநிலத்தின் முன்னேற்றத்திலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகின்றார்கள்.இம்மாநிலத்தில் இயற்கைப் பேரிடர்கள் வரும்போதெல்லாம் அரசுடன் இணைந்துப் பல நற்பணிகளைச் செய்துவருகின்றார்கள். பல்வேறு துறைகளில் முதலீடு செய்து மாநிலத்தின் பொருளாதாரத்தையும்முன்னேற்றுகின்றார்கள்.
உழவுத் தொழிலைச் சிறப்பிக்கும் வகையில் தமிழர்கள் மரபு வழியாகத் தைத்திங்களை அறுவடைத்திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும் தைப்பொங்கலிட்டுக் கொண்டாடி வருகின்றார்கள். பல்லாயிரக்கணக்கானஆண்டுகளாகச் செழிப்புடனும் இளமையுடனும் திகழும் தமிழரின் மொழியும் பண்பாடும், வடகரோலினா மாநிலஆளுனரால் ஏற்பிசைவு பெற்றுள்ளது. அவர் தமிழைச் சிறப்பித்துத் தாமும் தமிழரின் வரலாற்றில்சிறப்பெய்தியுள்ளார். தமிழரின் புத்தாண்டு தைத் திங்களின் முதல் நாளில் தொடங்குவதையும், வடகரோலினாவில்வாழும் தமிழர்கள் இம்மாநிலத்தின் குமுக, பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் நன்முறையில் தாக்கத்தைஏற்படுத்தியுள்ளதாகவும், தமிழ் இந்நாட்டின் பண்பாட்டுப் பன்மைக்கும் தொன்மைக்கும் பங்களித்திருப்பதாகவும்,தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் உலகின் மிகப்பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று என்றும்மனமுவந்து பாராட்டியுள்ளார்.